கோவையில் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி மலர்மிதா, திருக்குறளில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். மேலும், புதிய சாதனை முயற்சியாக திருக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு கூறி உலக சாதனை படைத்துள்ளார். 1330 குறள்களுக்கும் அலகிட்டு வாய்பாடு கூறி உலக சாதனை புரிந்துள்ளார். இதனை ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் அங்கீகரித்துள்ளது.
திருக்குறளை உலக நூலாகவும், தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என்பதற்காக இதனை முன்னெடுத்துள்ளதாக மலர்மிதா நேற்று தெரிவித்தார்.