சிங்காநல்லூர் - Singanallur

போதை மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேர் கைது

போதை மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேர் கைது

கோவை கரும்புக்கடை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கரும்புக்கடை சாரமேட்டில் உள்ள காலி இடத்தில் சிலர் சந்தேகம்படும்படி நின்றிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்ததில் , அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை சவுகார் நகரை சேர்ந்த ரிஷ்வான் சுகைல்(24), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஆஷிக் ஷெரீப்(23), வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் நவாஸ்(29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 போதை மாத்திரை, 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய முஜிப் ரகுமான்(27), கட்டதுரை (எ) நவுபால் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా