சிங்காநல்லூர் - Singanallur

லாரி-மொபட் மோதல்; வாலிபர் பலி

லாரி-மொபட் மோதல்; வாலிபர் பலி

கோவை காந்தி நகர் செல்வ விநாயகர் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் வர்கீஸ்(19). இவர் தனது நண்பர் வசந்தகுமார் (18) என்பவருடன் நேற்று மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வெள்ளக்கிணறு ரோட்டில் உள்ள எடை மேடை அருகே சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பிராங்க்ளின் வர்கீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வசந்தகுமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా