தொண்டாமுத்தூர் - Thondamuthur

அம்மனின் தாலியை திருடியதாக தகவல் அர்ச்சகர் கைது

அம்மனின் தாலியை திருடியதாக தகவல் அர்ச்சகர் கைது

கோவை பிரசிதி பெற்ற மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான வடவள்ளி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு நடைபெற்ற நகை ஆய்வு பணியின் போது அம்மனின் தாலியை அர்ச்சகர் திருடியது தெரிய வந்துள்ளது. கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நகைகள் சரிபார்ப்பு பணி கோவை இந்து சமய அறநிலைத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வின் போது மருதமலை திருக்கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோயிலில் உள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது இக் திருக்கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலின் அர்ச்சகர் தின கூலியான ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும், 14கிராம் எடையுள்ள 7 பவுன் தாலி, 14 பொன் குண்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூலை கொண்டு வந்து கொடுத்தார்.. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அது போலியானது என கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, அவரிடம் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் தான் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அறங்காவலர்கள் குழு மற்றும் கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.

మహబూబ్‌నగర్ జిల్లా