மேட்டுப்பாளையம் - Mettupalayam

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

கோவை சிவானந்தா காலனி அண்ணாநகரை சேர்ந்தவர் பரந்தாமன்(38). பேப்ரிகேசன் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா(36). இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட சண்டையில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பரந்தாமன் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று பரந்தாமன் டாடாபாத் 7வது தெருவில் உள்ள ஒரு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை சக ஊழியர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரண்யா ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிக்கு அமர்த்திய காண்டிராக்டர் சலீம் மற்றும் கட்டிட உரிமையாளார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా