

வாரப்பாளையம்: பொன்னூத்தம்மன் கோயிலை சேதப்படுத்திய யானைகள்
கோவை மாவட்டத்தில் உள்ள பன்னீர்மடை அருகே வாரப்பாளையத்தில் பொன்னூத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி இப்பகுதிக்கு யானைக் கூட்டங்கள் வருவதும் செல்வதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நேற்று (அக்.,8), கோயிலுக்கு வந்த யானைக் கூட்டம் கோயில் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.