பொள்ளாச்சி - Pollachi

முதலாம் ஆண்டு பட்டய படிப்பு துவக்க விழா

கோவை மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் 41வது முதலாம் ஆண்டு பட்டய படிப்பு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் கௌசல்யா தேவி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் உதயகுமார் தலைமை உரையாற்றினார். அப்போது கல்லூரியின் சிறப்புகள், கல்லூரியில் வழங்கப்படும் பாடப்பிரிவுகளை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து, ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் சிவக்குமார் பேசுகையில், டிப்ளமோ படிப்பின் முக்கியத்துவத்தையும், அதில் பயின்ற மாணவர்கள் சிறந்த தொழில் அதிபர்களாகவும், பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பதவி வகிப்பவர்களையும் குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கோவை எமரால் ஜுவல்லரியின் மனித வள மேம்பாட்டு தலைவர் வசந்தன் பங்கேற்ற மாணவர்களிடையே உரையாற்றுகையில், வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் கடின உழைப்புடன் நமது இலக்கை நோக்கி வெற்றி பெற்றால் ஏனைய அனைத்து வசதிகளையும் தாமாகவே தம்மை தேடி வரும் என வலியுறுத்தி பேசினார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా