பொள்ளாச்சி - Pollachi

முன்னாள் போலீஸ் ஐஜி. , பொன்மாணிக்கவேல் பேட்டி

பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவனடியார்கள் , முருக பக்தர்கள் அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார். இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிவனடியார்கள், முருக பக்தர்கள் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் போலீஸ் ஐஜி. பொன்மாணிக்கவேல் செய்தியாளரிகளிடம் பேசும் போது. , ஆதீனம் ஒரு புறம், வைணவர்கள் ஒரு புறம் , சைவர்கள் ஒருபுறம் என அனைவரும் பிரிந்தும், கருத்து வேறுபாடுகளால் கோவில்கள் சூரையாடபடுகிறது என்றும், கோவில்களுக்கு என பிரச்சனை என்று வரும்போது ஆன்மீக அன்பர்கள் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்ற வர வேண்டும் என்று கேட்டுகொண்டார். கோவிலில் இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களுக்கு கோவில் சொத்துக்களுக்கு பிரச்சினை வரும்போது காக்கா கூட்டம் போல் ஒன்றாக வரவேண்டும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా