பெரம்பலூரில் வெடிகுண்டு சோதனை.. பரபரப்பு
பெரம்பலூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் நேற்று(அக்.26) பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நகரத்தின் பல முக்கிய பகுதிகளில் மோப்பநாய் படை பிரிவினர் (ம) வெடிகுண்டு கண்டறிந்து அதனை அகற்றும் குழுவினர் ஆகிய இரண்டு குழுவினரும் பழைய பேருந்து நிலையம், நான்கு ரோடு, பெரம்பலூர் நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் மோப்ப நாய் சக்தியை கொண்டு வெடிகுண்டு சோதனையை மேற்கொண்டனர்.