குன்னம் - Kunnam

வாலிகண்டபுரத்தில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வாலிகண்டபுரத்தில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 47), வெற்றிவேல் (24) ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.19 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீடியோஸ்


பெரம்பலூர்
நோய் தீர மண்ணெண்ணெய் குடித்த தாய் பலி.. மகன் மீது வழக்கு
Feb 06, 2025, 13:02 IST/

நோய் தீர மண்ணெண்ணெய் குடித்த தாய் பலி.. மகன் மீது வழக்கு

Feb 06, 2025, 13:02 IST
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நோய் தீர மண்ணெண்ணெய் குடித்த தாய் உயிரிழக்க காரணமான மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உமேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 48 வயதான பெண் ஒருவர் பக்கவாத நோய் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மண்ணெண்ணெய் கொடுத்தால் பக்கவாத நோய் தீரும் என யாரோ கூறியதை கேட்ட அவரது மகன் உமேஷ், தனது தாயிற்கு மண்ணெண்ணெய்யை குடிக்க கொடுத்ததாக தெரிகிறது. இதனால், தாய் உயிரிழந்த நிலையில் உமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.