குன்னம் - Kunnam

கடத்தப்பட்ட காரில், 140 கிலோ கஞ்சா கடத்தல், 5 பேர் கைது

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கர் இவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போனது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் காரில் பொருத்தப்பட்டிருந்த GPS கருவி மூலமாக காரை கண்டுபிடிக்க முயற்சித்தபோது. கார் தமிழக எல்லையில் உள்ளது என GPS மூலமாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரை கண்டுபிடிக்க அஸ்கர் தமிழகம் வந்துள்ளனர். அப்போது பெரம்பலூர் மாவட்ட பகுதியில் கார் வருவதை தெரிந்து கொண்ட அஸ்கர் பெரம்பலூர் அருகே வல்லாபுரம் பகுதியில் ரோந்து போலீசாரின் உதவியுடன் காரை பிடித்துள்ளனர். காரில் இருந்து 6 பேர் இறங்கிய நிலையில், 3 பேர் தப்பி ஓடியுள்ளனர். அவர்ளை பிடித்து வவருவதற்குள் மேலும் காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடினர், அப்போது போலீசார் காரை சோதனையிட்ட போது அதில் சுமார் 140 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து காருடன் அவர்கள் 3 பேரையும் மங்களமேடு காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய 3 பேரையும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் 2 பேரை மட்டும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்(32), பாலா(33, அஜித்(36), மதன்(30) மற்றும் வெள்ளையன்(33) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்