பெரம்பலூர்: வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் மற்றும் நன்னை ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ரோஸ்டின் நிர்மலா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமா, பூங்கொடி, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.