குன்னம் - Kunnam

பெரம்பலூர்
காணாமல் போன முதியவர் பிணமாக மீட்பு
Jul 15, 2024, 04:07 IST/பெரம்பலூர்
பெரம்பலூர்

காணாமல் போன முதியவர் பிணமாக மீட்பு

Jul 15, 2024, 04:07 IST
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எம். எம். எஸ். நகரில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவர் யார்? , அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை யில் இறந்தவர் பெரம்பலூர்-துறையூர்ரோடு அரணாரை வடக்கு காலனியை சேர்ந்த பாபு (வயது 70) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 11-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் பாபுவை அவரது குடும்பத்தினர் பல் வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் காணா மல் போன பாபு கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்