ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது

ஸ்ரீவி: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு பகுதி சேடக்குடி தெருவிலுள்ள பெட்டிக்கடையில் வைத்து அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தன. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராப் காவல்துறையினர் பெட்டிக் கடையில் சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடையிலிருந்த லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கப் பணத்தை கைப்பற்றிய போலீஸார் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 09, 2024, 04:09 IST/இராசபாளையம்
இராசபாளையம்

இராஜபாளையம்: விபத்தில் இளைஞர் பலி....

Sep 09, 2024, 04:09 IST
இராஜபாளையம் அருகே கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி. போலீஸார் விசாரணை. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா கே. கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் முனியராஜ் 23, இவர் சென்னை தனியார் மோட்டார் கம்பெனியில் பணியாற்றிய தனது நண்பர் திருமணத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்து உள்ளார். டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு சென்று பால் கோவா வாங்கி திரும்பிய போது நேற்று இரவு ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.