சிவகாசி: விநாயக சதுர்த்தி ஊர்வலம். ஏராளமானோர் பங்கேற்பு....

85பார்த்தது
சிவகாசியில் காந்தாரி நடனம், ஆட்டம் பாட்டதுடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலையில் கரைக்கப்பட்டது. வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை செண்டை மேளம் முழங்க, காந்தாரி நடனம், பாரம்பரிய கிராமிய நடனம் என ஆட்டம் - பாட்டத்தோடு, ஆரவாரத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ரத வீதிகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஓம் காளி! ஜெய் காளி!! என முழக்கமிட்டபடி சென்றனர். ஊர்வலம் சென்ற பாதையின் பல்வேறு இடங்களில் கட்டிடங்களின் மேல் மாடி பகுதியிலிருந்து விநாயகரை பூ மழை பொழிந்து மலர் தூவி பலரும் வரவேற்றனர். ஊர்வலத்தில் பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், கையில் விளக்கு ஏந்தியும் பங்கேற்க, பக்தர்கள் விநாயகர், முருகன், சிவன்- பார்வதி, காளி வேடங்கள் தரித்தும் கலந்து கொண்டனர்.
நகரின் முக்கிய பல்வேறு வீதிகளின் வழியாக சென்ற விநாயகர் சிலைகளின் ஊர்வலம் ஜக்கம்மாள் கோவில் பின்புறம் நிறைவு பெற்றதை யடுத்து, தனியாருக்கு சொந்தமான நீர்நிலைத் தொட்டியில் நிரப்பி யிருந்த தண்ணீரில் விநாயகர் சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்து கரைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி