இராஜபாளையம்: விபத்தில் இளைஞர் பலி....

79பார்த்தது
இராஜபாளையம் அருகே கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா கே. கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் முனியராஜ் 23, இவர் சென்னை தனியார் மோட்டார்
கம்பெனியில் பணியாற்றிய தனது நண்பர் திருமணத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்து உள்ளார். டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு சென்று பால் கோவா வாங்கி திரும்பிய போது நேற்று இரவு ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி