பள்ளி வாகனம் மோதி ஒருவர் பலி

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள கோடாங்கிபட்டியில் தனியார் பள்ளி வாகனம் குழந்தைகளை ஏற்றி செல்லும் போது முன்னாடி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி வாகன டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி வாகனம் மோதி இறந்த நபர் யார் மற்றும் எந்த ஊரை சார்ந்தவர் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி