சாத்தூர்: தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்தவர் கைது....

69பார்த்தது
சாத்தூர் அருகே வீட்டின் அருகே தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் காவல் உட்கோட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மஞ்சளோடைப்பட்டியில் இதே பகுதியை சேர்ந்த இந்திரா காலனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது வீட்டின் அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் சரவெடி தயார் செய்வதாக வந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற
ஏழாயிரம்பண்ணை போலீஸார்
தகர செட்டை சோதனை செய்தனர். அப்போது அதில் சரவெடி மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் முழுமையாக தயார் செய்து பதுக்கி இருந்தன. மேலும் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸார் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி