அருப்புக்கோட்டை: திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் காரில் சொந்த வேலையாக தூத்துக்குடி சென்று விட்டு மீண்டும் உடுமலைப்பேட்டை திரும்பி கொண்டிருந்தார். காரை சுரேஷ் ஒட்டிச் சென்றார். அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது செட்டிகுறிச்சி விலக்கு அருகே திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பி தீ பற்றி எரிந்துள்ளது.

இதனால் அச்சமடைந்த சுரேஷ் காரை சாலையில் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். காரின் முன் பகுதி முழுவதும் மளமளவென தீ பற்றி எரிந்தது. ‌ தேசிய நெடுஞ்சாலை நடுவே கார் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி