சிவகாசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது...

83பார்த்தது
சிவகாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. 150 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே பழைய விருதுநகர் ரோட்டில் இயங்கி வரும் பள்ளியின் அருகேயுள்ள பேருந்து நிறுத்ததில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனை ஆனைக் குட்டம் பகுதியை அசோக்குமார் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி