மணப்பாறை - Manapparai

வெயில் தாக்கத்தால் மயங்கிய பாராளுமன்ற வேட்பாளர்: பரபரப்பு

வெயில் தாக்கத்தால் மயங்கிய பாராளுமன்ற வேட்பாளர்: பரபரப்பு

கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள வையமலைப்பாளையம் கிராமத்தில் பிரச்சாரத்தை துவக்கி தொடர்ந்து வெள்ளாளப்பட்டி, அரசுநிலைபாளையம், பூசாரிப்பட்டி உடையாபட்டி, ஆணையூர், அமையபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடும் வெயிலையும் பொருட்படுத்தத்தாது திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் கடும் வெயிலால் சோர்வடைந்த வேட்பாளர் ஜோதிமணி ஓந்தாம்பட்டி கிராமத்துக்கு வந்த போது அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு ஆரத்தியுடன் காத்திருந்த பெண்களுடன் பேசியவாறு சென்ற நிலையில் கோயில் முன்பு அங்குள்ள நிர்வாகிகள் துண்டு அணிவித்தபோது மயக்கமடைந்த ஜோதிமணி அப்படியே தரையில் அமர்ந்தார். பின்னர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். இந்நிலையில் அவருக்கு பதிலாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது பரப்புரை மேற்கொண்டார். பின்னர் சிறுது நேரம் தரையில் அமர்ந்தவாறே ஓய்வெடுத்தவர் பின்னர் மெதுவாக எழுந்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு கேட்டு விட்டு புறப்பட்டு சென்றார். கடும் வெயிலால் வேட்பாளர் மயக்கமடைந்தது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా