லால்குடி - Lalgudi

சமயபுரத்தில் மதுபோதையில் விஐய், அஜித் இடையே தகராறு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மூன்று அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பார்களும் செயல்பட்டு வருகிறது. இந்த மூன்று பார்களிலும் 24 மணி நேரமும் மது விற்பனை கள்ள சந்தையில் நடைபெற்று வருகிறது. இதனை சமயபுரம் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இரண்டு கொலைகள், வழிபறி, செல்போன் திருட்டு, அடிதடி என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இன்று மாடக்குடியை சேர்ந்த விஜய்யும், அஜித் இவர்கள் இருவரும் மகாலிங்கிற்கு சொந்தமான மதுபாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய், அஜித்தை விறகு கட்டையால் அடித்துள்ளார். இதில் உச்ச போதையில் இருந்த அஜித் மதுபான பாரின் வெளியே வந்து பீர் பாட்டிலை உடைத்து விஜய்யின் தலையில் அடித்ததில் ரத்தம் சொட்ட சொட்ட விஜய் அந்தப் பகுதியிலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து சமயபுரம் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் விஜய் மற்றும் லேசான காயத்துடன் இருக்கும் அஜித்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా