திருவெறும்பூர் - Thiruverumbur

பட்டப் பகலில் வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும் , திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர் இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்கள் கேபிள் தொழில் செய்து வருகின்றனர். பன்றியும் வளர்த்து வருகின்றனர் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). டிப்ளமோ இன்ஜினியர். இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ். ஐ. டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் முத்துக்குமார் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவில்பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன் உருவாக்கத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவன் பேரில் போலீசார் விசாரணையில் தீவிர படுத்தியுள்ளனர். இதன் பேரில் போலீசார் விசாரணையில் தீவிரப்படுத்தி உள்ளனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా