ஸ்ரீரங்கம் - Srirangam

திருச்சியில் அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில், திருச்சி நீதிமன்றம், வ. உ. சி சிலை அருகே, கோடைகால நீர் மோர் பந்தலை திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் வழக்கறிஞர்கள் ஏற்பாட்டில், திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளும், இளநீர், ஜூஸ் வகைகள், எலுமிச்சை பழச்சாறு, நீர்மோர் ஆகியவற்றை அதிமுக மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சசிகுமார், இணைச் செயலாளர் முல்லை சுரேஷ், அமைப்புச் செயலாளர் மனோகரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా