
திருச்சியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
திருச்சி லால்குடி மாந்துறையை சேர்ந்தவர் விஸ்வநாதன் துவாக்குடி அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிகிறார். மார்ச் 15ஆம் தேதி பஸ்ஸில் ஓட்டுநர் குமாருடன் காந்தி மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை வழிமறித்து ரிக்ஷா ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார். ஒலி எழுப்பி வழி விடுமாறு கேட்டதால் அந்த ரிக்ஷா ஓட்டுனர் ஆத்திரத்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து இபி ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ரகுராமன் என்பவரை கைது செய்தனர்.