![அடையாளம் தெரியாத கார் மோதி பைக்கில் சென்ற இருவர் காயம் அடையாளம் தெரியாத கார் மோதி பைக்கில் சென்ற இருவர் காயம்](https://media.getlokalapp.com/cache/05/85/0585f8fe41feb5d7ba304dd0f0c69095.webp)
அடையாளம் தெரியாத கார் மோதி பைக்கில் சென்ற இருவர் காயம்
துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி இவர் தனது நண்பரான சேகர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பாதர்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத கார் ஓட்டுநர் யார் என்பது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.