துறையூர் - Thuraiyur

ஓசரப்பள்ளி--நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை

ஓசரப்பள்ளி கிராமத்தில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களுக்கு உப்பிலிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். துறையூர் அருகே உள்ள ஓசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் வயது 52 நீரழிவு நோய் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் நீண்ட கால நோய் பாதிப்பு காரணமாக மனச்சோர்வில் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று அரளி விதை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் உடனடியாக உறவினர்கள் அவரை உப்பிலிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து அவருடைய மனைவி நளினி அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా