விளாத்திகுளம் - Vilathikulam

பேக்கரி ஊழியர் மர்மமான முறையில் மரணம்

பேக்கரி ஊழியர் மர்மமான முறையில் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுந்தரபச்சையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகனான மணிமாறன் (29) என்ற இளைஞர் விளாத்திகுளம் சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லஷ்மி ஐயங்கார்" பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பேக்கரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மணிமாறன் இன்று அதிகாலை 3 மணியளவில் வயிறு வலிப்பதாக கூறிவிட்டு கடையின் ஊழியர்கள் தங்கும் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். பின்னர் சக ஊழியர்கள் பேக்கரிக்கு வேலைக்குச் சென்ற நிலையில் மணிமாறன் மட்டும் அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கும் அறையில் தூங்கிக்கொண்டிருந்த மணிமாறன் கண்ணிலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை எழுப்ப முயற்சித்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக மணிமாறன் குடும்பத்தினர் மற்றும் விளாத்திகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்த மணிமாறனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இளைஞரின் இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా