விளாத்திகுளம் - Vilathikulam

எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு! அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அதிமுகதினர், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில், எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நீர் மோர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு திறந்து வைத்து, மோர் செவ் இளநீர், தர்ப்பூசணி நொங்கு, வெள்ளரிப்பழம், கிர்ணிபழம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அவைத்தலைவர்கணபதி, வார்டு கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా