சீர்காழி - Sirklai

சீர்காழி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று(செப்.12) மாலை குப்பை கிடங்கில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இதனால் சுவாசக் கோளாறு உள்ளிட்டு நோய்கள் வரக்கூடும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்