குவியல் குவியலாக கொட்டி கிடக்கும் குப்பைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் பகுதிகளில் பல மாதங்களாக குப்பைகள் ஆங்காங்கே குவியல் குவியலாக குவிந்து கிடக்கிறது. கொள்ளிடம் கடைவீதி, ரயில் நிலையம் செல்லும் சாலை, அக்ரகாரம் தெரு, புதுவை தெரு, பயணியர் விடுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடைக்கிறது. மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலையும் உள்ளது.