தமிழகம் முழுவதும் வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகாலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் 395 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. மேலும் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ஏராளமானோர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.