மின்மாற்றியில் மின் கசிவு ஏற்படுவதாக புகார்

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அடுத்த கொற்கை ஊராட்சி பால்பண்ணை பகுதியில் உள்ள மின்மாற்றியில் மின் கசிவு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி