மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்

77பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் அரச மருத்துவமனையில் இன்று இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் என்ன சிகிச்சை அளித்துள்ளீர்கள் என தரக்குறைவாக திட்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் வீரமணி என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி