சாமந்தான்பேட்டை மீனவர்கள் மீட்பு

58பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான் பேட்டை பகுதி மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டு கடல் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சக மீனவர்கள் சேர்ந்து அந்த விசை படகை கயிறு கட்டி பாதுகாப்பாக கரையோரம் இழுத்து வந்தனர். நல்வாய்ப்பாக மீனவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி