சீர்காழி - Sirklai

சீர்காழி பிரதான சாலையில் அதிர்ச்சி சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதி பிரதான சாலையில், நேற்று(செப்.13) மேல பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் எஞ்சினில் இருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் காரை நிறுத்துவதற்குள் என்ஜின் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த பெண் உட்பட மூன்று பேர் காரை விட்டு இறங்கினர். இதனை அடுத்து சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்க வந்த சீர்காழி தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


நாகப்பட்டினம்