குறைதீர்க்க கூட்டத்தில் 457 மனுக்கள் பெறப்பட்டன

59பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தமாக 457 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளிடம் மனுவினை ஒப்படைத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி