எடப்பாடி - Edappadi

எடப்பாடி: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

எடப்பாடி: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஆனந்தி. செந்தில்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு அகிலா (20) மற்றும் புனிதா (19) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அகிலா திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். புனிதா 2022-2023 கல்வியாண்டில் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 முடித்து மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் மாணவி புனிதாவிற்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மாணவி புனிதா நேற்று முன்தினம்(அக்.7) நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். இதிலும் மாணவி புனிதாவிற்கு அரசு ஒதுக்கிட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி புனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் துறையினர் மாணவி புனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி புனிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా