கெங்கவல்லி - Gangavalli

சேலம்: இளைஞர்களை மிரட்டிய ஜல்லிக்கட்டு காளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் நேற்று (ஜனவரி 17) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 450 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியினை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.  வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளை "கலெக்ஷன் பாய்ண்ட்" பகுதியில் வெளியேறியது அப்போது அங்கு நின்றிருந்த இளைஞர்கள் இரண்டு பேரை காளை ஒன்று குத்த வந்த நிலையில் தடுப்பு பனை மரத்தால் அமைக்கப்பட்ட கட்டையில் பின்புறம் நின்று காளை குத்தாதவாறு தற்காத்துக் கொண்டனர்.  மற்றொரு இளைஞர் தரையில் படுத்துக்கொண்டு காளையிடமிருந்து தப்பிய திக்திக் சுவாரஸ்யமான காட்சி அங்கிருந்த இளைஞர்கள், பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் சாமர்த்தியமாக பாடுபட்ட வீரர் ஒருவர் இளைஞரை காப்பாற்றி செல்லும் சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా