ஆத்தூர் - Aathur

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

ஆத்தூர் அருகே அதிமுக சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் கோடை வெயில் கொதித்து வரும் நிலையில் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு ஒரு பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా