ஆத்தூர்: அறிவு சார் மையம் குடிநீர் இயந்திரம் சீரமைப்பு

65பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. மேலும் இந்த நூலகத்தில் அரசு தேர்வாணைய நூலகத்தில் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி இருந்த நிலையில் ஒரு வாரமாகியும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை சரிசெய்யப்படாமல் படிக்க செல்லும் மாணவர்கள் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தனர். 

இந்த செய்தி நமது லோக்கல் ஆப் செய்தியில் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து மாணவர்கள் கேன் குடிநீரை பயன்படுத்துவதை தவிர்த்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி