சங்ககிரி - Sankari

சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தம் அருகே சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேலம் பாராளுமன்ற வேட்பாளருமான டி. எம். செல்வகணபதி நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், வாழைப்பழம் மற்றும் நீர்மோர் ஆகியவைகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக அவை தலைவர் தங்கமுத்து, துணைச் செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், உட்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்