ஓமலூர் பஸ் நிலையத்தில் நிழற்கூடம் இல்லாததால் மக்கள் அவதி!
சேலம் மாவட்டத்தில் கோடை வெப்பமானது சுட்டெரித்து வரும் நிலையில், ஓமலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிழற்கூடம் இல்லாததால் சேலம், தருமபுரி, மேட்டூர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓமலூர் பேருந்து நிலையப் பகுதியில் நிழல் கூடம் அமைத்து தரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.