மானமதுரை - Manamadurai

பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில், 2024-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைக்க, வெடிபொருள் சட்டமும் விதிகளும்(2008)-ன் கீழ் உரிய ஆவணங்களுடன் 10. 10. 2024-க்குள் மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் (e-sevai) மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், திட்ட வரைபடம் (Blue Print), பத்திர ஆவணங்கள், ரூ. 500/-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை/ஸ்மார்ட் அட்டை), நகராட்சி/ பேரூராட்சி / ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற விண்ணப்பித்தல் வேண்டும். அவ்வாறு பெறப்படும் தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது, 20. 10. 2024-க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோஸ்


சிவகங்கை