![](https://media.getlokalapp.com/cache/c3/c5/c3c564712acdf1faa6ad6bc2b60a7854.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
அகழாய்வில் தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வில் 120 செ. மீ. ஆழத்தில் தந்தத்தினாலான ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உருளைவடிவிலான உடற்பகுதியை உடைய இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோளவடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. சிறிய அளவிலான இந்த ஆட்டக்காய் 1. 3 செ. மீ உயரமும் 1. 5 செ. மீ விட்டம் கொண்ட தலைப்பகுதியையும் 1. 3 செ. மீ விட்டம் கொண்ட அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. கருமை நிறமுடைய இந்த ஆட்டக்காய் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது. தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழச் சமூகம் வாழ்ந்தற்கானச் சான்றாகக் கருதப்படுகிறது. என இன்று காலை 9 மணி அளவில் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.