கோயம்புத்தூர் - Coimbatore

கல்லால் தாக்கி வாலிபர் கொலை.. தொழிலாளி வெறிச்செயல்

கல்லால் தாக்கி வாலிபர் கொலை.. தொழிலாளி வெறிச்செயல்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 26), இவர் திருப்பூர் மாவட்டம் தெக்காலூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்(செப்.7) இரவு அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 46) மது போதையில் பெருமாள் கோவில் பின்புற பகுதிக்கு வந்து அங்கு இருந்த கோகுலிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த துரைசாமி அங்கு கடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து கோகுலின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கோகுல் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த கோகுலின் சகோதரர் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோகுலை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோகுலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று துரைசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
சவக்கிடங்கில் இருந்து ரத்தம் -அதிகாரிகளின் அலட்சியம்!
Sep 09, 2024, 04:09 IST/சிங்காநல்லூர்
சிங்காநல்லூர்

சவக்கிடங்கில் இருந்து ரத்தம் -அதிகாரிகளின் அலட்சியம்!

Sep 09, 2024, 04:09 IST
கோவை அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 30 உடல்களை பாதுகாக்க வசதி உள்ளது. விபத்தில் ஏற்படும் மரணம், தற்கொலை கொலை போன்ற உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தினமும் 15 முதல் 20 உடல்களுக்கு இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடலில் இருந்து வெளிவரும் ரத்தம் குழாய் மூலம் சாக்கடையில் விடப்படுகிறது. இந்நிலையில் ஏழாம் தேதி மூடப்பட்டு இருந்த சாக்கடைகளில் இருந்து ரத்தம் வெளியேறி ஆறாக ஓடியது. ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடரை தூவியும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் அவதியற்றனர். இந்நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு ரத்தக்கறை படிந்த தண்ணீர் தொடர்பாக பொதுப் பணித்துறை மூலம் கடந்த 7 ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று பிரச்னை சரி செய்யப்பட்டது என மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.