கல்லால் தாக்கி வாலிபர் கொலை.. தொழிலாளி வெறிச்செயல்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 26), இவர் திருப்பூர் மாவட்டம் தெக்காலூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்(செப்.7) இரவு அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 46) மது போதையில் பெருமாள் கோவில் பின்புற பகுதிக்கு வந்து அங்கு இருந்த கோகுலிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த துரைசாமி அங்கு கடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து கோகுலின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கோகுல் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த கோகுலின் சகோதரர் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோகுலை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோகுலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று துரைசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.