கோயம்புத்தூர் - Coimbatore

வேளாண் அமைச்சர் தலைமையில் கோவையில் 3 மாவட்ட ஆய்வுக் கூட்டம்

வேளாண் அமைச்சர் தலைமையில் கோவையில் 3 மாவட்ட ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(செப்.3) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேசுகையில், பொள்ளாச்சியில் தென்னை வாடல் நோய் குறித்து விவசாயிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளும் மாணவர்களும் இந்நோய் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
சிங்காநல்லூர் பகுதியில் நூதன முறையில் பைக் திருட்டு!!
Sep 04, 2024, 02:09 IST/சிங்காநல்லூர்
சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் பகுதியில் நூதன முறையில் பைக் திருட்டு!!

Sep 04, 2024, 02:09 IST
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியில் உள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் நூதன முறையில் பைக் திருட்டு நடந்துள்ளது. சோதனை ஓட்டம் என்ற பெயரில் ஒரு வாலிபர் விலையுயர்ந்த KTM பைக்கை திருடிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த சபரி ஸ்ரீனிவாசன் (34) என்பவர் அங்குள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று(செப்.3), டிப் - டாப் உடையணிந்த ஒரு வாலிபர் கடைக்கு வந்து KTM பைக் வாங்க விரும்புவதாகக் கூறினார். கடை ஊழியர்கள் அவருக்கு விலையுயர்ந்த KTM பைக்கை காட்டினர். வாலிபர் பைக்கை சோதனை ஓட்டம் செய்ய விரும்பினார். மேலாளர் சபரி ஸ்ரீனிவாசன் அனுமதி அளித்தார். பாதுகாப்பிற்காக கடை ஊழியர் நவீனை உடன் செல்லும்படி கூறினார். வாலிபர் நவீனை பின்னால் அமர வைத்து பைக்கை ஓட்டிச் சென்றார். சிறிது தூரம் சென்றதும், தான் தனியாக ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறி நவீனை காமராஜர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் இறக்கி விட்டார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த நூதன திருட்டு குறித்து மேலாளர் சபரி ஸ்ரீனிவாசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து திருடனைத் தேடி வருகின்றனர்.