பேரூர்: ஒரு நாள் காளான் வளர்ப்பு பயிற்சி

72பார்த்தது
பேரூர்: ஒரு நாள் காளான் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை, காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சியை மாதந்தோறும் நடத்தி வருகிறது. வரும் 6ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. காளான் வளர்ப்பு தொடர்பான அனைத்து அடிப்படை தகவல்களையும் இந்த பயிற்சியில் கற்றுக்கொள்ளலாம். பங்கேற்கும் விருப்பமுள்ளவர்கள் ரூ. 590 (வரி உட்பட) கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 0422-6611336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ளோர் அனைவரும் பங்கேற்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி