கொமாரபாளயம் |

காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய காவேரி பாலம் அடியில், அடையாளம் தெரியாத, 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் இருப்பதாக நேற்று காலை 07: 00 மணியளவில் பொதுமக்கள் போலீசில் தகவல் கூறினர். இது குறித்து வி. ஏ. ஒ. முருகன் கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றினர்.  யார்?  எந்த ஊர்? என்ற விபரம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்துள்ளார். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால், இவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கும் என தெரியவருகிறது. தற்கொலையா?   அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? யார்?  எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

வீடியோஸ்


தமிழ் நாடு
Apr 19, 2024, 05:04 IST/

அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு

Apr 19, 2024, 05:04 IST
ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றும் தன்மை கொண்டது. வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாமல் சிறந்த அரசு நிர்வாகத்தை மட்டும் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக முடியும். பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு செலுத்திய பிறகு உங்கள் விரலில் மை அடையாளத்துடன் செல்ஃபி எடுத்து, லோக்கல் ஆப்பில் பகிரவும். அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு வழங்கப்படும். புகைப்படத்தை பதிவிட முதலில் உங்கள் மொபைலில் உள்ள லோக்கல் ஆப்பை க்ளிக் செய்யவும். பின்னர் முகப்புத் திரையில் உள்ள '+' பொத்தானைத் தட்டவும். பிறகு 'வாக்குப்பதிவு செல்ஃபி போட்டி' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது + பட்டனை அழுத்தி உங்கள் செல்ஃபி போட்டோவை சேர்க்கவும். தலைப்பில் "#My Vote My Right" என்று பதிவிடவும். அதன் பிறகு, உங்கள் விவரங்களை உள்ளிட்டு, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.