ராசிபுரம் - Rasipuram

ராசிபுரத்தில் திமுக குடிநீா் பந்தல் திறப்பு

ராசிபுரத்தில் திமுக குடிநீா் பந்தல் திறப்பு

ராசிபுரம் நகர திமுக சாா்பில் கோடை வெய்யிலையொட்டி பொதுமக்கள், பயணிகள் பயன்பாட்டிற்காக குடிநீா் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகர திமுக செயலாளா் என். ஆா். சங்கா் தலைமையில் நடைபெற்ற விழாவில், கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆா். என். ராஜேஸ்குமாா் பங்கேற்று பொதுமக்கள், பயணிகளுக்கு குடிநீா், தா்பூசணி பழங்கள், நீா்மோா், இளநீா், குளிா்பானம் போன்றவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா். கவிதா சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா். விநாயகமூா்த்தி, சாரதி, நடராஜன், பிரபு, பழனிசாமி, வாா்டு செயலாளா்கள் பி. சக்திவேல், கேசவன், தங்கதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా