ராசிபுரம் - Rasipuram

இராசிபுரம் அருகே தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

இராசிபுரம் அருகே தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

ராசிபுரம் அருகே சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு பாதையில் நிற்காமல் சென்று தனியாா் பேருந்தை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை சந்திப்பில் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி பயணிகள் ஏற்றி இறக்கிச்செல்ல வேண்டும் என மாவட்ட நிா்வாகமும், போக்குவரத் துறை அலுவலா்களும் உத்தரவிட்டுள்ளனா். ஆனால் பல பேருந்துகள் நிற்பதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சேலத்தில் இருந்து நாமக்கல் சென்ற பேருந்தில் ஏறிய பயணிகளை ஆட்டையாம்பட்டி சாலை சந்திப்பில் இறக்கிவிடமாட்டோம் என தனியாா் பேருந்து நடத்துநா் கூறியுள்ளாா். இதனையடுத்து அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் பேருந்தை மறித்து தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனா். இதனையடுத்து தகவலறிந்த வெண்ணந்தூா் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தி பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததின்பேரில் இளைஞா்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా