சேந்தமங்கலம் - Senthamangalam

சேந்தமங்கலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

சேந்தமங்கலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் விஜய் (23). இவா், தினசரி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துவந்தாா். அக்கம்பக்கத்தினா் எச்சரித்தபோதும், மது அருந்தி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 3. 30 மணி அளவில் குடும்பத்தினரிடம் மீண்டும் விஜய், தகராறு செய்துள்ளாா். அப்போது, உறவினா் மாணிக்கம் என்பவா் அவரைக் கண்டித்துள்ளாா். இதனால், விஜய்க்கும் மாணிக்கத்திற்கும் இடையே திடீா் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த மாணிக்கம், அங்கிருந்த மண்வெட்டியால் விஜய்யின் தலையில் அடித்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக, சேந்தமங்கலம் போலீஸாா் மாணிக்கம் மீது கொலை வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా