பரமத்தி வேலூர் - Paramathi Vellore

கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி

கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே பெருங்குறிச்சி குடி தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு கோமதி என்ற மனைவியும், சஞ்சய்(21) என்ற மகனும், மைதிலி என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். இதனிடையே நேற்று காலை சஞ்சய் வீட்டிலிருந்து கல்லூரிக்கு தேர்வு எழுதப் போவதாக கூறிவிட்டு கந்தம்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு சென்றார். அங்கு அவர் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தபோது, திடீரென சஞ்சய் மயங்கி கீழே விழுந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மாணவரை மீட்டு சிகிச்சைக்காக நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சஞ்சய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவரின் தந்தை தேவராஜ் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా