பரமத்தி வேலூர் - Paramathi Vellore

பாசிபயறு, நிலக்கடலை விதைப்பண்ணைகள் ஆய்வு

பாசிபயறு, நிலக்கடலை விதைப்பண்ணைகள் ஆய்வு

நாமக்கல் திண்டமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் அமைக்கப்பட்டுள்ள பாசிபயறு ஆதார நிலை விதைபண்ணை(ம) நிலக்கடலை சான்று நிலை விதைபண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைச்சான்று(ம) உயிர்மச்சான்று துறையின் உதவி இயக்குநர்(ம) நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆகியோர் ஆய்வு செய்தனர். திண்டமங்கலம் கிராமத்தில் விதைச்சான்று(ம) உயிர்மசான்று துறையின் சார்பில் காளியண்ணன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வம்பன்-4, பாசிபயறு ஆதார நிலை விதைப்பண்ணை (ம) சின்னுசாமி கணேசன் ஆகியோரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டி. எம். வி-14 நிலக்கடலை சான்று நிலை விதைப்பண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைச்சான்று(ம) உயிர்மச்சான்று துறையின் உதவி இயக்குநர் சித்திரைசெல்வி(ம) நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயககுநர் சித்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது விதைப்பண்ணையின் முக்கியத்துவம் (ம) விதைப்பண்ணையில் கலவன் நீக்குதல், பயிர் விலகு தூரம் பராமரித்தல், பயிர் வளர்ச்சிப்பருவம், பூக்கும் தருணத்தில் உரிய நுண்ணூட்டசத்து மேலாண்மை பூச்சி நோய் தாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விதை உற்பத்திக்கான வயல்களை விதைச்சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். என எடுத்துரைத்தனர். நாமக்கல் வட்டார உதவி விதை அலுவலர்கள் சங்கர் (ம) பொன்னுவேல் ஆகியோர் உடனிருந்தனா்

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా