வேப்பனஹள்ளி - Veppanahalli

மகராஜகடை: மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மகராஜகடை: மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மவட்டம் மகராஜகடை அடுத்துள்ள மாதிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47) செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்-17-ஆம் தேதி அன்று இரவு அவர் செங்கல்லை கட்டிங் வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் அவரது கைப்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மகராஜகடை போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி