

கரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கூலித் தொழிலாளி கைது
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பெரியகருப்பூரை சேர்ந்த திருமணம் ஆகாத கூலித்தொழிலாளி நடராஜ் (40) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இன்று (மார்ச் 13) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.