குளித்தலை - Kulithalai

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே. பேட்டை ஊராட்சி, திம்மாச்சிபுரம் 2 ஆவது வார்டு பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் குடிநீர் சரிவர வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்த போதும் மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் சரி செய்து தருவதாகவும் கடந்த ஒரு மாத காலமாக கூறிவந்துள்ளார். மேலும் கே. பேட்டை ஊராட்சி பகுதியில் இரண்டாவது வார்டு பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி, மயான பாதைக்கு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருந்து வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள் இன்று திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாலாபேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இன்று மதியத்திற்குள் பழுது பிரச்சனைகளை சரி செய்து குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా